December 22, 2007

இன்றைய குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு சபிக்கப்பட்ட வைரம்

1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது கான்பூர் இந்திரன் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கபட்டு பெர்ரிஸ் என்ற ராணுவ வீரனால் பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பழுப்பு வைரம் இப்போது லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது. இது ஒரு சபிக்கப்பட்ட வைரமாம். இந்த வைரத்தை வைத்திருந்த பெர்ரிஸ¤க்கு உடல் நலம் சீரழிந்தது. அதைப் பெற்றுக்கொண்ட அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான். ஸ்கார் ஒயில்டின் நண்பரான விஞ்ஞானி எட்வர்ட் ஹெரான் என்பவர் இந்த வைரத்தின் கடைசி சொந்தக்காரர். 1890வது ஆண்டு இந்த வைரத்தை அவர் பெற்றபோது அவர் பட்ட துயரங்கள் அளவற்றது. அவர் தன் நண்பர்களுக்கு அதைக் கொடுத்தபோது அடுத்தடுத்து சோதனைகளாம். அதை அவர் ஒரு ஏரியில் வீசியெறிந்ததும் கூட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரிடமே வந்து சேர்ந்ததாம். ஏழாண்டுகளுக்கு முன்பு விட்டேகர் என்ற தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை பொறுப்பாளர் அதை ஒரு கருத்தரங்குக்கு எடுத்துச் சென்றபோது மேகங்கள் இருண்டு ஒரு பெரிய புயல் காற்றில் சிக்கித் தவித்தாராம். “அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது, நாங்கள் பிழைத்ததே மறு பிறப்பு’ என்கிறார் அவர். இப்படி சாப வரலாறு படைத்த வைரம்தான் இப்போது சாதுவாக லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் அமரப்போகிறது.

உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை அதிகாலை, உத்தரப் பிரதேச போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து, பாரபங்கி ரயில் நிலையத்தில் அந்த இரு நபர்களையும் கைது செய்தார்கள். முகமது காலித் மற்றும் முகமது தாரிக் என்ற அந்த இருவரும், வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். லக்னோ, ஃபைசாபாத் மற்றும் வாரணாசி நகரங்களில் நீதிமன்ற வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இரு நபர்களும், வெடிபொருள்களுடன் பிடிபட்டதாக, உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிஜ்லால் தெரிவித்தார்

இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து

உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஆற்காடு வீராசாமிக்கும் இராமதாசுக்கும் இடையே நடப்பது என்ன?