December 20, 2007

இன்றைய குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கருணாநிதி சோனியா சந்திப்பு

நான்கு நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு. கருணாநிதி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய கருணாநிதி, தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்தும், மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் தொடர்பாக, இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். தனது சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவது குறித்து அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாத போதிலும், அதை முன்னேற்றமாகவே தான் கருதுவதாக கருணாநிதி கருத்துத் தெரிவித்தார். இதனிடையே, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள்

சிப்ஸ் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தை

சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின்படி, இனிப்புப் பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவோருக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தைகளும் பிறக்கின்றனவாம்"

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு, வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000-வது ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில், அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் பல்கலைக்கழக பேருந்தில் தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி அருகே வந்துகொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்குத் தீ வைத்தது. அதில் சிக்கிய மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், அதிமுகவினர் 28 பேர் குற்றவாளிகள் என சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கடந்த 6-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில், சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம், அந்தக் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரையும் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி, இந்த மூன்று கைதிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நம் தேசியக்கொடியும், தேசியகீதமும் மங்கையரின் உள்ளாடைக்குள்!

குஷ்புக்கு பழநி கோர்ட் நோட்டீஸ் : சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியர் சிலை அருகே காலணி அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோ பத்திரிகைகளில் வெளியானது. இச்செயலை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் பல ஊர்களில் உள்ள கோர்ட்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆயக்குடியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் சார்பில் வக்கீல் தினேஷ் குமார் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,"பட விழாவின் போது தெய்வ உருவங்களுக்கு முன் காலணி அணிந்து கால்மேல் கால்போட்டு குஷ்பு உட்கார்ந்தது, வழிபாட்டுக்குரிய தெய்வ உருவங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்திய தண்டனை சட்டப்பட்டி இது குற்றமாகும். இதுகுறித்து அவரை விசாரிக்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் சசிகலா பிப் 28-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய குஷ்புவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எல்லாம் சரிதான். சந்தோசம்தான். இந்தக் கொடுமைக்கு நாம் யாரிடம் போய் முட்டிக்கொள்வது?





















நமது தேசியக்கொடியும், தேசிய கீதமும், இந்துக்கடவுள்களும் பெண்களின் உள்ளாடைக்குள் சென்றுவிட்டதே! இதை நாம் எண்ண செய்யப் போகிறோம். கீழ்க்காணும் இணைப்பில் சென்று பார்த்தால் நண்பர்களுக்கு உண்மை விளங்கும். இதற்கு எத்தனை பேர் போர்க்கொடி தூக்கப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.....இந்த இணைப்பில் சென்று பார்ப்பதைக்கூட அவர்கள் வியாபாரத்திற்கான விளம்பர உத்தியாகவே எடுத்துக்கொள்வர் என நினைக்கிறேன். ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது. நாம் குரல் எழுப்பவேண்டிய எத்தனையோ பிரச்சினைகளை விட்டுவிட்டு பிரயோஜனமில்லாதவைகளுக்காக பிதற்றிக்கொண்டிருக்கிறோம்......
இந்த மாதிரியான அநாகரீகமானவற்றை எதிர்த்து ஒவ்வொருவரும் குரல்கொடுக்கவேண்டும்.... http://www.cafepress.com/buy/hindu/-/pv_design_prod/pg_6/p_storeid.45451248/pNo_45451248/id_10795115/opt_/fpt______________D/c_70

இந்தியர்களை மலேசியா வெறுத்து பழிவாங்குவது ஏன்?

மலேசியப் பிரதமர் படாவி அங்கு வாழும் தமிழர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறார். இதன் பின்னணி பயங்கரமானது. இனி அங்கு வாழும் இந்தியர்கள் கவுரவத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்து விட்டது. கடந்த 2005-ம் ஆண்டில் மலேசிய ராணுவத்தில் பணியாற்றிய மூர்த்தி என்ற வீரர் கொல்லப்பட் டார். அவர் உடலை முஸ்லிம்கள் நடைமுறைப்படி புதைப்பது என்றும், இல்லை இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது. மூர்த்தி மனைவி நீதிமன்றம் சென்றார். ஆனால், ஷரிஅத் கோர்ட் வென்றது.
அதற்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி படாங்ஜவா பகுதியில் மாரியம்மன் கோவில் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரம் கழித்து தீபாவளி நன்னாள் வந்த போது எல்லாரும் வேதனையுடன் அதைக் கொண்டாடினர். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 3 ( பிரிவு 1) `மற்ற மதங்களை அமைதி நல்லிணக்கத்துடன் அனுசரிக்கலாம்' என்று குறிப்பிட்ட போதும், அரசமைப்புச் சட்ட விதி 12 (1) ன்படி இஸ்லாமிய கோர்ட் உத்தரவுக்கு நீதித்துறை கட்டுப்பட்டது என்றிருக்கிறது.முன்பு மகாதிர் முகமது பிரதமராக இருந்த போதே இஸ்லாமிய அடிப்படையில் நாட்டை வழி நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது உருவானதே `பூமிபுத்ரா' என்ற வார்த்தை. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை அமலானது.ஆனால், மலேசியாவில் வாழும் பெரும்பான்மை இந்தியர்களில் பலர் பெரிய அளவில் வசதி வாய்ப்பற்றவர்கள். படிப் படியாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்றுத்தரும் பள்ளிகள் குறைக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரம் இந்துக் கோவில்கள் அழிக்கப் பட்டதால், இந்துக்களின் கவுரவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்ட வேலை பார்க்க அழைத்துச் சென்ற மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள், அதே சமயம் அங்கே வர்த்தகர்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள், அதிகாரிகள் என்று செட்டியார்கள், மரைக்காயர்கள், இலங்கைத் தமிழர்கள் சென்றனர். மலையாளிகளும் அங்கு சென்று குடியேறினர். தற்போது, மலேசியாவின் வளம் அதிகரித்திருப்பதால், சராசரி வருமானம் அதிகரித்ததால் அங்குள்ளவர்கள் வளமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழரில் அதிகப் பணக்காரர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் இலங்கைத் தமிழர். அதனால் தான் தற்போது போராட்டம் நடத்தும் இண்ட்ராப்' அமைப்பு தெரிவித்த தகவலில் `அரசு உயர் பதவிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 40 சதவீதம் இருந்த தமிழர்கள் இன்று அதில் 2 சதவீதம் மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறது. மலேசியாவில் 15 பொதுப் பல்கலை உள்ளது. அதில், மொத்தமுள்ள மாணவர்கள் 45 ஆயிரம். ஆனால் இந்தியர்கள் 5 சதவீதம் மட்டுமே' என்று குறிப்பிட்டிருக் கிறது. அதுமட்டுமல்ல, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மொத்த குற்றவாளிகளில் 40 சதவீதம் இந்தியர்கள் என்பதும் வேதனை தரும் தகவலாகும்.
மலேசிய மக்கள் தொகை 2.7 கோடியில் 1.6 கோடிப் பேர் மலாய் மக்கள். 50 லட்சம் பேர் சீனர்கள், 27 லட்சம் பேர் இந்தியர். மலாய் என்றழைக்கப்படும் பூமிபுத்ரர்களுக்கு' அதிக வாய்ப்பு தரும் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.இப்போது உலக அரசியல் தலைவர்கள் பார்வை மலேசியா மீது விழுவதால் பிரதமர் படாவி சற்று சுருதி குறைந்து காணப்படுகிறாரே தவிர அடிப்படையாக இந்தியர் மீது மலேசிய அரசு வெறுப்புக் கொண்டிருக்க மூன்று காரணங்கள் உள்ளன.அவை வருமாறு:எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒ.ஐ.சி-யுடன் படாவி சேர்ந்து கொண்டு அமெரிக்க எதிர்ப்பு சக்தியாக அணிசேரா நாடுகளின் அமைப்பான நாம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். அதை இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்க எதிர்ப்பு என்பதைவிட இஸ்லாமிய சக்திகளின் ஆதரவாக அணிசேரா இயக்கத்தை மாற்ற விரும்பிய படாவி செயல் முறியடிக்கப்பட்டது.`ஆசியான்' நாடுகள் கூட்டமைப்பு ஆசிய நாடுகளில் பொருளாதார இணக்கம் காண விரும்பிச் செயல்படுகிறது. இதில் இந்தியா, சீனா முக்கிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவும் அங்கம் வகிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் இந்து-புத்தமத கலாசார நெருக்கம் இருப்பதை இந்தியா சுட்டிக் காட்டி, அந்த அடிப்படையில் பொருளாதார வளம் காண விரும்புகிறது. இதை சிங்கப்பூர் ஆதரிக்கிறது. இம்முயற்சிக்கு சீனா ஆதரவு காட்டவில்லை, அவர்களின் கைப்பாவையாக மலேசியா இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் அதிக சம்பந்தமில்லை, வரைபடத் தில் மேற்கே இருக்கிறது பாகிஸ் தான். மலேசியாவுக்கு ஆதரவு தருகிறது பாகிஸ்தான். இந்த அமைப்பில் பாகிஸ்தானும் அங்கம் வகிக்கிறது. சீனா, மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மலேசிய அதிபர் படாவி முக்கியப் பங்காற்றுகிறார். பீஜிங்- இஸ்லாமாபாத்- கோலாலம்பூர் கூட்டணியை அவர் விரும்புகிறார். அந்த அமைப்பில் சிங்கப்பூர்- இந்தியா - ஜப்பான் ஒரே கருத்தில் சிந்திக்கின்றன.குறிப்பாகச் சொன்னால் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவுக்கு ஆதரவாக செல்லும் படாவி அதனால் அங்குள்ள சீனர்களைத் தாக்கவில்லை.பெரிய அண்ணனைத் தாக்க விரும்பாமல் இந்தியர்களைத் தாக்குகிறார். இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் படாவி அணுகுமுறை எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம்.