November 07, 2007

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! - ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்?

யப்பா எப்பப்பா வருவேன்னு என் சின்ன பொண்ணும்...

அப்பா அடுத்த தீபாவளிக்காவது வந்துருவியான்னு என் பெரிய பொண்ணும்...

என்னங்க இது உங்களுக்கே நல்லா இருக்கான்னு எம் பொஞ்சாதியும்...

ஏன்டா மகனே நான் சுடு காட்டுக்குப் போறதுக்குள்ளே வந்துருவியான்னு என் ஆத்தாவும்...

கேட்கும்போது ... ....

ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்??



- உங்கள் பிரியமுள்ள சம்பத் (சவூதி அரேபியா)

மன்மத ராசா "மாலதி"

இன்றைய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது"

"எதிர்கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும். அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை
வரும். இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவதுதான் நல்லது. மூன்றாவது அணி வர வாய்ப்பு இல்லை. எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது" - சோ

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. 2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

வட இலங்கையில் கடும் மோதல்

  • உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள் : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
  • லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது : சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன
  • பாகிஸ்தான் அவசரநிலைப் பிரகடனத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும்: பேநசிர் பூட்டோ - பாகிஸ்தானில் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்திய அவசரகால நிலையை எதிர்த்து பொதுமக்கள் கண்டனம் செய்ய வேண்டுமென்று முன்னாள் பிரதமர் பேநசிர் பூட்டோ குரலெழுப்பியிருக்கிறார்
  • செர்பியாவின் தீவிர தேசியவாத தலைவர் செசெல்ஜ் மீது போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு ஆரம்பமாகிறது : செர்பியாவின் தீவிர தேசியவாத கடும் கோட்பாட்டுக் கட்சியின் தலைவர் வொயிஸ்லாவ் செசெல்ஜ் மீதான வழக்கு விசாரணை தி ஹேக்கில் கூடும் அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன் ஆரம்பமாகவிருக்கிறது
  • உலக எரிபொருள் பயன்பாடு 55 சதவீதம் அதிகரிக்கும் - அனைத்துலக எரிபொருள் கழகம் எச்சரிக்கை : உலக நாடுகள் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு 2030ஆம் ஆண்டளவில் 55 விழுக்காடுகள் அதிகரிக்கும் என்றும் இதில் பெருந்தொகையான எரிபொருளை சீனாவும் இந்தியாவுமே பயன்படுத்தும் என்றும் அனைத்துலக எரிபொருள் கழகம் புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
  • பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது : இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.
    ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது.
    இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார்.
    சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

புலிகள் பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? - கனிமொழி

"ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது"

- கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்