October 27, 2007

யுகேந்திரன் மலேசியா வாசுதேவன்

இன்றைய குறள்

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு

  • ஜனதாதளத்தில் திடீர் மாற்றம் : கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சி அமைக்க முனைந்திருக்கின்றன. பாரதீய ஜனதா ஆதரவுடன் இருபது மாதங்கள் ஆட்சி நடத்திய மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒப்பந்தப்படி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மக்களைச் சந்திக்கத் தயார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்தது.
    அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், சட்டப்பேரவை கலைக்கப்படாமல், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மீண்டு்ம் இயக்கத்துக்குக் கொண்டுவர முடியும். இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக-வின் யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் மற்றும் கர்நாடக ஆளுநருக்கு கடிதங்களை அனுப்பியிருப்பதாக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகெளடவின் மகனுமான எச்.டி. குமாரசாமி தெரிவித்தார். இந்த திடீர் அரசியல் மாற்றம் குறித்து, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கட்டா சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ஏற்கெனவே ஆதரவு தர மறுத்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் தற்போது தாங்களாகவே ஆதரவு தர முன் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    கர்நாடக ஆளுநரிடம் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியிருப்பதாகவும், ஆதரவுக் கடிதங்களை ஆய்வு செய்துவிட்டு முடிவு அறிவிப்பதாக அவர் தெரிவித்திருப்பதாகவும் கட்டா சுப்ரமணியம் தெரிவித்தார்.
  • இந்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இந்தியப் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது
  • பாகிஸ்தானில் கடும்போக்கு மதகுரு ஆதரவாளர்கள் 13 பேரை கொன்றுள்ளனர் : வடமேற்குப் பாகிஸ்தான் பகுதியில் சுமார் 13 பேர் கடும்போக்கு முஸ்லிம் மதகுரு ஒருவருடைய ஆதரவாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்
  • மன்னார் மாவட்ட மடு தேவாலயப் பகுதியை பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்க மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கோரிக்கை : மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கஷ்டங்களைப் போக்குவது தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், கொழும்பு பேராயர் மற்றும் மடு தேவாலய பரிபாலகராகிய அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை ஆகியோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
  • ஜார்க்கண்ட் மாவோயியவாதிகள் தாக்குதலில் 17 பேர் பலி : இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் சனிக்கிழமை அதிகாலை மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள்
  • சோமாலியத் தலைநகரில் கடும் சண்டை : சோமாலியத் தலைநகர் மொகதிஷுவில் பலத்த மோதல் வெடித்துள்ளது. நகரின் தென்பகுதியில் ஷெல் குண்டுகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டுள்ளன
  • இன்றைய (அக்டோபர் 27 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews