September 02, 2007

கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்ற நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை


- பெரியார்

எச்சரிக்கை : பக்கவாதம்!

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) STROKE: Remember The 1st Three Letters... S.T.R. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks. Seriously.. Please read: STROKE IDENTIFICATION: During a BBQ, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) and just tripped over a brick because of her new shoes. They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this... A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.
RECOGNIZING A STROKE Thank God for the sense to remember the "3" steps, STR . Read and Learn! Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke. Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:
  • S * Ask the individual to SMILE.
  • T * Ask the person to TALK..... TO SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (i.e. . .. It is sunny out today).
  • R * Ask him or her to RAISE..... B OTH ARMS.
NOTE : Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out their tongue. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke. If he or she has trouble with ANY ONE of these tasks, take the person immediately!! to the nearest hospital. A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்துவழங்கும் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடல்கள்!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அகன் அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

  • கருத்து வேற்றுமை காரணமாகவே முஷாரப்புடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது : பெனாசீர் - பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்புடன் தாம் நடத்திய, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவர்த்தகள், அதிபரின் அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஆகிய விடயங்களின் ஏற்பட்ட வேற்றுமைகள் காரணமாக தடைபட்டு நிற்பதாக நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கூறியிறுக்கிறார்
  • பாதுகாப்பு செலவு பற்றிய விவரங்களை தெரிவிக்க சீனா முன்வந்துள்ளது : தனது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விபரங்களை ஆண்டுதோரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இராணுவப் படைப் பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் வெளியிடப்படும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை வந்துள்ளது
  • இரான் அணுதிட்டம் பெரும் முன்னேற்றமடைந்துள்ளதாக அகமதுநிஜாத் அறிவிப்பு : இரான் தனது அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது அகமதுநிஜாத் தெரிவித்துள்ளார். யூரேனியத்தை செரிவூட்டக்கூடிய மூவாயிரம் சென்டிரிபூயூஜ்ஜுகள் இரானிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் அணு ஆற்றல் அமைப்பு இது குறித்து கடந்த வாரம் வெளியிட்ட மதிப்பீட்டை விட இது அதிகம்

நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா

அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அமெரிக்க படையினரும், உளவுப் பிரிவினரும் ஒசாமாவை தீவிரமாக தேடினர். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டாலும், ஒசாமா தனது குடும்பத்துடன் தான் தலைமறைவாக இருக்கிறார். அவரை சுற்றி குறைந்த பட்சம் 40 காவலர்கள் நிற்பர். அதைத்தாண்டி, அடுத்தடுத்த அடுக்கு பாதுகாப்பும் அவருக்கு உள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்க படையினர் ஒசாமா தலைமறைவாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்ததை, மெய்காவலர் பார்த்து விட்டார். உடனடியாக ஒயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார். தனது மெய்க்காவலர்களுக்கு வேத மந்திரமாக ஒரு விஷயத்தை போதித்து வைத்திருக்கிறார் ஒசாமா. அமெரிக்கப் படை சுற்றி வளைத்துவிட்டால், `ஒசாமவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும்' என்பது தான் அது. அமெரிக்கப் படையினர் நெருங்கியதை அறிந்த மெய்க்காவலர்கள், அவரை படுக்க வைத்து வேறிடத்துக்கு துாக்கிச் சென்று விட்டனர். மலைப்பகுதி போர் தந்திரத்தில் அமெரிக்கப் படையினருக்கு திறமை இல்லாததால், ஒசாமாவை பிடிக்க முடியாமல் போய்விட்டது. மலைக்குகைகளை வெறுமனே சோதனையிடுவது தான் அவர்களது வழக்கமாக இருந்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒசாமாவின் மெய்க்காவலராக இருந்தவர் நசிர் அல் பாரி. ஒசாமாவின் வாழ்க்கை முறை பற்றி, `நியூஸ் வீக்' இதழுக்கு பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை. நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார். அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம். உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை. ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான். இவ்வாறு அல் பாரி கூறினார். அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.