July 25, 2007

தமிழோசை

இன்றைய குறள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

சரவணா ஸ்டோர்ஸ் "தில்லுமுல்லு"

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். பாவம் அப்பாவி மக்கள். விளம்பரங்களை மட்டுமே நம்பிக் கடைக்குள் செல்லும் கபடமற்ற நம் உடன்பிறப்புக்களை இந்த முதலைக்கூட்டம் முழுங்குவது எத்தனை நாள் நீடிக்கும்?? காலம் பதில் சொல்லும்!! என்ன செய்துவிட முடியும்? என்ற திமிறில் செய்கின்ற ஊழலும், மெத்தனமும் இணையத்தளத்தில் முதலில் நாறட்டும், பிறகு தெரியும் இந்தத் தலைமுறையின் வேகமும், வீச்சும்!!
கூகிள் குரூப்-பில் வந்த செய்தியை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். முடிந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
Dear All,

This is an useful information about Saravana Stores in T Nagar.

Before two months I purchased a Transcend pendrive and a Samsung keyboard .
In the keyboard three keys were not working, to complain this I called
Samsung customer care. To my surprise the customer care officer says they
never manufactured keyboard. Then I called Saravana stores, they gave a
samsung customer care number. But that number is not Samsung customer care
no, its a shop in Richi street. Then I had a deep look at my keyboard and
noticed that the symbol of Samsung is different from the original symbol
which in my mobile. This happened befor two days.

Yesterday the pendrive gave me trouble. I was not able to copy pictures in
it. If i copy, some of them cannot be opened and some them will be
collapsed. For this also when I called Saravana stores, Another surprise,
they gave me the same number of the shop in richi street. When i shouted
saying my conversation with Samsung, after a long hold, he gave me another
number saying that its also a customer care number, I dont know which
number is that, Nobody is picking the phone in that number.

So what i want you to do is, forward this mail to all of ur friends, Let
this msg reach all and atleast after this incident to me, we will avoid
purchasing any electronic items in Saravana stores.

Please forward this to all. Consider this is a well wish that u r doing for
ur friends.

Thank you.

"சிந்தையைச் சிதறவிடும் யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் செய்கிறான். கடைத்தெருவில் செருப்புத் தைக்கும் சக்கிலியன் குவிந்த மனத்துடன் திறம்படத் தன் தொழிலைச் செய்கிறான். இவ்விருவரில்
சக்கிலியனே கரும யோகத்தில் சிறந்தவன்"

- சுவாமி சித்பவானந்தர்

இணையத்தில் "தில்லுமுல்லு"

இன்டர்நெட் உலகில் பிராட் பேண்ட் வசதி வந்ததிலிருந்து இணையம் வழியாக முகம் தெரிந்த மற்றும் தெரியாத யாருடனும் அரட்டை அடிப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது. முதலில் பொழுது போக்காகத் தொடங்கி நல்ல நட்பாக மாறும் அரட்டைகளும் உண்டு. அதே நேரத்தில் பல அரட்டைகள், ஏமாற்றுதல், திருட்டு திருமணங்கள், பாலியியல் பலாத்காரங்கள் என முடிந்த செய்திகளும் நாம் காண்கிறோம். இவை தவிர இணையத் தொடர்பிற்குப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களும் பலவிதமான பாதிப்பிற்கு உள்ளாவதும் பரவலாக ஏற்படுகிறது. முதலில் சொல்லப்பட்ட பாதிப்புகளுக்கு தனி மனித ஒழுக்கம் தேவை. ஆனால் கம்ப்யூட்டரைப் பாதுகாக்க சில பாதுகாப்பு வழிகள் தேவை. இவை இரண்டையும் இங்கு காண்போம்.

1.சேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் அபாயகரமானவர்கள் என்ற பய உணர்ச்சி உங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். எனவே அறிமுகம் தெரியாத எவரிடமும் உங்களின் பெயர், முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற எதனையும் தர வேண்டாம்.
2.நீங்கள் வழக்கமாகச் செல்லும் அல்லது மேற்கொள்ளும் பணிகள் எதனையும் அரட்டை அறையில் தெரிவிக்க வேண்டாம். குறிப்பாக பள்ளி அல்லது கல்லூரி செல்லும் நேரம், பணிக்குச் செல்லும் நேரம், இன்டர் நெட்டில் அரட்டை அறைக்கு வரும் நேரம் ஆகியவற்றைச் சொல்லவே கூடாது.

3.உங்களுடைய கம்ப்யூட்டர் வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் இணைக்க வேண்டாம். கூடுமானவரை அரட்டை அறையில் அறிமுகமாகும் நபர்களை வெளியே சந்திப்பதனைத் தவிர்க்கவும். முக்கியமாக சந்திக்க வேண்டுமானால் தனியானதொரு இடத்தில் இந்த நண்பர்களைச் சந்திப்பதனைத் தவிர்த்திடுங்கள். சுற்றிலும் ஆட்கள் இருக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்து சந்தியுங்கள். உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் நீங்கள் எங்கு யாரைச் சந்திக்கச் செல்லுகிறீர்கள் என்பதனைச் சொல்லிச் செல்லுங்கள்.

4.சேட் செய்திடுகையில் ஏதேனும் இணையத் தளத்திற்கான லிங்க்குகள் இருந்தால் அவற்றில் கிளிக் செய்து அத்தளம் செல்வதனைத் தவிர்த்திடுங்கள். அதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸ் வரலாம். அல்லது உங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பாலியியல் சமாச்சாரங்கள் அடங்கிய தளமாக அது இருக்கலாம்.

5.மாடரேட்டர் (Moderator) இருக்கும் சேட் அறைக்கே செல்லுங்கள். இதனால் யாரும் உங்களைப் பயமுறுத்திவிட்டோ அல்லது ஏமாற்றிவிட்டோ சென்றுவிட முடியாது. மேலும் உங்கள் அரட்டையை ஒருவர் கண்காணிக்கிறார் என்கிற பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

6.உங்களுடைய புகைப்படத்தினை எந்த காரணத்தைக் கொண்டும் தர வேண்டாம். இதனால் அடுத்த முனையில் இருப்பவர் உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய வாய்ப்புண்டு. அவர் தான் அவருடைய படத்தினை அனுப்பி விட்டாரே நாம் அனுப்பினால் என்ன என்று எண்ண வேண்டாம். அவர் அனுப்பிய படம் அவருடையது தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

இங்கே கூறிய எல்லா விஷயங்களும் உங்களுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் இந்த அறிவுரைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

கார்களில் செல்லும்பொழுது "சீட் பெல்ட்" அணிவது எவ்வளவு அவசியம் என்பதையும், அப்படி அணியாமல் அதிகப்பிரசிங்கித்தனமாகச் சென்றால் ஏற்படும் விளைவு என்ன என்பதையும் இந்த இணைப்பில் சென்று வீடியோவைப்பதிவைக் காணவும்.

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

''ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே'' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் பத்து டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். பத்து டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, ''ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?'' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

''அதெல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்'' என்றார் வியாபாரி.

Amazing Global Incident Map

தமிழில் தரமுடியாததற்கு மண்ணிக்கவும். இது ஒரு முக்கியமான விசயம். ஒவ்வொரு நாடு, நகரங்களில் என்னென்ன குற்றங்கள், தவறுகள் நடக்கிறதென்பதற்கான புள்ளி விபரங்கள், ஒவ்வோரு 300 வினாடிகளுக்கொரு முறை உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது. கீழுள்ள இணைப்பில் செல்க.
Thought you might find this of interest.
When you click on the website link below (or copy and paste it to your browser), a world map comes-up showing what strange and dangerous things are happening right now in every country in the world. This updates every few minutes. You can move the map around, zero in on any one area and actually up-load the story re: the incident in question. It is amazing when you can see the things that are happening, sometimes even your city. There is a lot happening in our world every minute. This "map" updates every 300 seconds...constantly& lt; FONT face="Timeshttp://www.globalincidentmap.com/home.php Click on any icon on the map for text update information.