May 02, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையுலக முதல் பாடல்

துள்ளியெழுந்தது பாட்டு

பாலம் இடிப்பதற்குமுன் பெயர் மாற்றத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

விஸ்வஹிந்து பரிஷத் இராமர் பாலத்தை இடித்தால் நாடு தழுவிய போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 'நாசா' கண்டுபிடித்த பழம்பெரும் பாலத்திற்கு 'ஆதாம் ப்ரிட்ஜ்' என்று பெயர் வைத்ததுபற்றி ஏன் வாய் திறக்கவில்லை. ஆக பிரச்சினை அதல்ல, எல்லாமே தேர்தலையும், இந்திய அரசியலையும் உள்நோக்கத்தில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறது. இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்குக் குரல் கொடுப்போம். ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். To view Dinamalar please click here.
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

பேராசிரியர் இராமநாதன் அவர்களின் பேட்டி :

புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். தி நியூ யார்க் டைம்ஸ் இதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வார்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இந்தக் கூற்றை ‘நான்சென்ஸ்’ என்று இகழ்ந்தார்கள். ஆனால், ராமநாதன் சொன்னதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

இராமநாதன் அவர்கள் :கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் என் தாத்தா விவசாயியாக இருந்தார். பிறந்தது சென்னையில். பிறகு திருச்சி, மதுரை, பங்களூரு ஆகிய இடங்களில் படித்தேன். அப்பா ராணுவத்தில் இருந்த பின் விற்பனையாளராக மாறினார். அது எங்களைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்றது. பங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங் படிக்கச் சென்றேன். செகந்திராபாதில் குளிர்சாதனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினேன். அப்போது தான் எனக்குப் பொறியியல் பிடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

பேராசிரியர் இராமநாதன் அவர்கள் 'தென்றல்' (அமெரிக்கா) மாத இதழுக்கு அளித்த மிக மிக உபயோகமான பேட்டியைத் தொடர்ந்து படிக்க, தயவு செய்து 'தலைப்பை'க் 'க்ளிக்' செய்யவும். நீங்கள் 'தென்றல்' மாத இதழின் வாசகர் இல்லையெனில் இலவசப் பதிவு செய்துகொள்ளவும்.
பேரா.வி.ராமநாதன்

ஹரிஹரன் குரலில்.....




'தண்ணீர் தேசம்' - கவிப்பேரரசு வைரமுத்து

அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா –
போகம் இழ...
கவிதை வேண்டுமா –

உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ….
வளர்ச்சி வேண்டுமா –

தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா –
வியர்வையை இழ…

என் தந்தை எழுதிய "உண்மையான உழவனுக்குத் திருநாளேது" என்ற கவிதைக்கு கிடைத்த பரிசு இந்தத் 'தண்ணீர் தேசம்'. (அந்தக் கவிதையை வெகுவிரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.) அப்போதுதான் நான் இதனைப் படிக்க நேர்ந்தது. இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்று. எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாகவே நீங்களும் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
(பின் குறிப்பு : நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே படித்துவிட்டேன்)
தொடர்ந்து படிக்க தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும்.
http://navneethsmart.googlepages.com/ThanneerDesam.pdf